தேசியம்
செய்திகள்

தமிழ் பெண் கொலை குற்றச்சாட்டு விசாரணையை எதிர்கொள்ளும் கணவன்

மனைவியைக் கொலை செய்த குற்றச் சாட்டை எதிர்கொள்ளும் தமிழர் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

38 வயதான தீபா சீவரத்தினம் 2020ஆம் ஆண்டு March மாதம் 13ஆம் திகதி Scarboroughவில் அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில்   பலியானவரின் தாயார் படுகாயமடைந்தார்.

இந்த சம்பவத்தில் மூவர் மீது முதல் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்களில் பலியான பெண்ணின் கணவர் விஜேந்திரன் பாலசுப்ரமணியம் மீதான நீதிமன்ற விசாரணை
எதிர்வரும் April மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த சம்பவத்தில் Gary Samuels, Steadley Kerr ஆகிய இருவர் மீதும்  முதல் நிலை கொலைக் குற்றச் சாட்டுகள் பதிவாகியுள்ளன.

இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 31ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Markham நகரில் தமிழர் சுட்டுக் கொலை!

Lankathas Pathmanathan

Ottawaவில் போராட்டங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள்ள கைது!

Lankathas Pathmanathan

Leave a Comment