தேசியம்
செய்திகள்

Liberal அரசாங்கம் மீது நம்பிக்கை இழந்துள்ளோம்: Conservative

Liberal அரசாங்கம் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகளை விசாரிக்க ஒரு உண்மையான, சுதந்திரமான கண்காணிப்புக்குழுவை நியமிக்கும் என்ற நம்பிக்கையை தாம் இழந்துள்ளதாக Conservative கட்சி தெரிவிக்கின்றது.

கனடாவின் கடந்த இரு தேர்தல்களில் சீனா தலையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, சில வாரங்களுக்குள் சிறப்பு அறிக்கையாளரை நியமிப்பதாக Justin Trudeau உறுதியளித்துளார்.

இந்த நிலையில் Conservative கட்சியின் தலைவர் Pierre Poilievre தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் Trudeau தனக்கு நெருக்கமான ஒருவரை, அல்லது தனது அரசாங்கத்திற்கு நெருக்கமான ஒருவரை இந்த பிரச்சினையைக் கவனிக்கும் சிறப்பு அறிக்கையாளராக தேர்ந்தெடுப்பார் எனவும் Poilievreகூறினார்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த பிரதமர் Trudeau , குறித்த நியமனத்துக்கான பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகக் தெரிவித்தார்.

Related posts

Vaughan நகர முதல்வர் பதவிக்கு Steven Del Duca போட்டி

Lankathas Pathmanathan

A.L. wild-card தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட Blue Jays

Lankathas Pathmanathan

தொற்றின் எண்ணிக்கை வரும் வாரங்களில் குறையலாம் – வெளியாகியது புதிய modelling தரவுகள்!

Gaya Raja

Leave a Comment