தேசியம்
செய்திகள்

Toronto உயர் நிலைப் பாடசாலை துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு இளம் சந்தேக நபர்கள் கைது

Toronto உயர் நிலைப் பாடசாலையின் வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு இளம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்

வியாழக்கிழமை (16) மதியம் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 15 வயது மாணவர் காயமடைந்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 17 வயதுடைய இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

Peel பிராந்தியத்தில் தேடுதல் உத்தரவு நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை (17) காலை கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் மீது கொலை முயற்சி உட்பட 10 குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் இவர்களின் பெயர் விபரங்களை வெளியிட முடியாது.

இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை .

Related posts

கனடாவின் COVID தொற்றின் எண்ணிக்கை அடுத்த வாரம் ஒரு மில்லியனை தாண்டும்!

Gaya Raja

கனடாவில் 98,393க்கும் மேற்பட்ட தொற்றின் திரிபுகள் உறுதிப் படுத்தப்பட்டன!

Gaya Raja

சராசரி வாடகை இரண்டாயிரம் டொலர்களை தாண்டியது!

Lankathas Pathmanathan

Leave a Comment