தேசியம்
செய்திகள்

CERB கொடுப்பனவுகளை பெற்ற 49 மத்திய ஊழியர்கள் பதவி நீக்கம்

வேலை வாய்ப்பு, சமூக மேம்பாடு அமைச்சில் பணிபுரியும் போது CERB கொடுப்பனவுகளை பெற்ற ஊழியர்களை மத்திய அரசாங்கம் பதவி நீக்கியுள்ளது.
CERB கொடுப்பனவு திட்டத்தை வேலை வாய்ப்பு, சமூக மேம்பாடு அமைச்சு நடைமுறைப்படுத்தியது.

இந்த அமைச்சு நடத்திய ஒரு உள்ளக விசாரணையில் அதன் ஊழியர்கள் சிலர்  CERB கொடுப்பனவுகளை பெற்றது தெரியவந்தது.

இவர்களில் 49 ஊழியர்களை மத்திய அரசாங்கம் பதவி நீக்கியுள்ளது.

இவர்கள் பணியாளர் நம்பிக்கையை மீறியுள்ளதாக துணை அமைச்சர் Mary Crescenzi  கூறினார்.

CERB திட்டத்தின் கீழ் கனேடியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் 211 பில்லியன் டொலர்கள் கொடுப்பனவு வழங்கப்பட்டது.

இவற்றில் தகுதியற்றவர்களுக்கு குறைந்தபட்சம் 4.6 பில்லியன் டொலர்கள் அதிகமாகச் செலுத்தப்பட்டது.

மேலும் 27.4 பில்லியன் டொலர்கள் கொடுப்பனவு குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

COVID தொற்று காரணமாக வேலை இழந்த கனடியர்களுக்கு CERB திட்டம் நிதி உதவி வழங்கியது.

Related posts

கடவுச்சீட்டு விண்ணப்ப தாமதங்கள் நீக்கப்பட்டன: அமைச்சர் Gould

Lankathas Pathmanathan

Ontario தடுப்பூசி முன்பதிவு இணைய தரவு மீறலில் 360,000 பேர் பாதிப்பு

Lankathas Pathmanathan

ரஷ்யாவின் போர் குற்றங்கள் குறித்த ICC விசாரணைக்கு உதவுள்ள கனடா!

Lankathas Pathmanathan

Leave a Comment