தேசியம்
செய்திகள்

உரிமையாளர்கள் அனுமதியின்றி வீடு விற்கப்பட்ட சம்பவம்

வீட்டு உரிமையாளர்கள் அனுமதியின்றி வீடொன்று விற்கப்பட்ட சம்பவம் குறித்து Toronto காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

வீட்டு உரிமையாளர்களாக தங்களை அடையாளம் காட்டி வீட்டை விற்பனை செய்ததாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களை அடையாளம் காண கால்வதுறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இதனை ஒரு சிக்கலான அடமான மோசடி விசாரணை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

2022ஆம் ஆண்டு January மாதம் வேலை காரணமாக கனடாவை விட்டு வீட்டு உரிமையாளர்கள் வெளியேறிய நிலையில் அவர்களின் வீடு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமக்கு தெரியாமல் தங்களது வீடு விற்கப்பட்டதை அவர்கள் பல மாதங்களுக்குப் பின்னரே அறிந்துள்ளனர்.

ஒரு ஆணும் பெண்ணும் வீட்டு உரிமையாளர்களாக போலி அடையாளத்தைப் பயன்படுத்தி வீட்டை விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள காவல்துறையினர் அவர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Related posts

குற்றம் சாட்டப்பட்ட இலங்கை போர்க் குற்றவாளியை உயர் ஸ்தானிகராக நியமிக்க முடியாது: கனடா

Gaya Raja

கனடிய படையில் சேவையாற்றியவர்களுக்கு உதவும் முகமாக 11 ஆயிரம் டொலர்களை திரட்டிய Connecting GTA

Lankathas Pathmanathan

Poilievre தலைமையில் Toronto பெரும்பாகத்தில் Conservative கட்சி வெற்றி பெறாது: Brown

Lankathas Pathmanathan

Leave a Comment