தேசியம்
செய்திகள்

Toronto புகையிரத நிலையத்தில் கத்திக் குத்து

Toronto புகையிரத நிலையமொன்றில் நிகழ்ந்த கத்தி குத்தில் ஒருவர் மரணமடைந்தார்.

High Park புகையிரத நிலையத்தில் வியாழக்கிழமை (08) மாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.

மரணமடைந்தவர் ஒரு பெண் என Toronto காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் உயிர் ஆபத்தற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Related posts

மீண்டும் ஒரே நாளில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள்

Lankathas Pathmanathan

இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகரித்தது பணவீக்க விகிதம்?

Lankathas Pathmanathan

Patrick Brownக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான மதிப்பாய்வு கனடிய தேர்தல் ஆணையரால் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment