தேசியம்
செய்திகள்

$6.4 மில்லியன் வாகன திருட்டு குற்றச்சாட்டில் இரண்டு தமிழர்களும் கைது

6.4 மில்லியன் டொலர் பெறுமதியான வாகன திருட்டு குற்றச்சாட்டில் இரண்டு தமிழர்களும் கைதாகியுள்ளனர்.

Mississauga, Brampton உட்பட Toronto பெரும்பாகம் முழுவதும் இயங்கியதாக கூறப்படும் வாகன திருட்டு வளையத்தை காவல்துறையினர் முறியடித்தனர்.

இதில் சுமார் 1.4 மில்லியன் டொலர் பெறுமதியான 19 திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

5 மில்லியன் டொலர் மதிப்புள்ள மாற்றப்பட்ட வாகன அடையாள எண்களைக் (altered vehicle identification numbers) கொண்ட மேலும் 50 வாகனங்களும் மீட்கப்பட்டன.

ஏழு பேர் கைது செய்யப்பட்ட இந்த விசாரணையில் மொத்தம் 116 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன

கைதானவர்களில் Mississauga நகரை சேர்ந்த 24 வயதான கஜன் கருணாநிதி, 30 வயதான ஆதவன் முருகேசபிள்ளை ஆகிய தமிழர்களும் அடங்குகின்றனர்

இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

போராட்டங்களின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக நஷ்ட ஈடு கோரி வழக்கு பதிவு

Lankathas Pathmanathan

ஆறாவது COVID அலைக்குள் நுழைந்துள்ள Ontario!

Justin Trudeau தலைமையில் சிவில் சேவை ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment