British Colombia மாகாணத்தில் இன்று அதிகாலை Merritt நகர பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட துப்பாக்கி பிரயோகம் நிகழ்ந்ததாக தெரியவருகிறது.
இதில் எவரும் காயமடையவில்லை என Merritt நகர முதல்வர் தெரிவித்தார்
அதிகாலை 5 மணி முதல் 6:30 மணிக்கிடையில் இந்த துப்பாக்கி பிரயோகம் நிகழ்ந்ததாக நகர முதல்வர் கூறினார்
இலக்கு வைக்கப்பட்டதாக நம்பப்படும் துப்பாக்கிச் சூடுகள் குறித்து தமது அதிகாரிகள் விசாரணை செய்வதாக RCMP உறுதிப்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து கைதுகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதாக RCMP உறுதிப்படுத்தாத போதிலும் பொதுமக்களுக்கு ஆபத்துகள் எதுவும் இல்லை என தெரிவித்தது.