September 14, 2026
தேசியம்
செய்திகள்

மத்திய, மாகாண சுகாதார அமைச்சர்கள் பேச்சுவார்த்தை உடன்பாடு இல்லாமல் முடிவு

மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சுகாதார அமைச்சர்களுக்கும் இடையிலான சுகாதாரப் பேச்சுவார்த்தை உடன்பாடு இல்லாமல் முடிவடைந்தது.

மாகாண, பிராந்திய சுகாதார அமைச்சர்களுடனான கூட்டு அறிக்கையில் இருந்து மத்திய அரசு விலகியுள்ளது.

இந்த மூலம் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு, சுகாதார-பராமரிப்பு நிதியை உயர்த்த எந்த உடன்பாடும் இல்லாமல் முடிவடைகிறது.

இந்த முடிவை ஏமாற்றமளிப்பவை என British Columbia சுகாதார அமைச்சர் Adrian Dix கூறினார்.

மத்திய நிதியுதவி 22 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் பின்னணியில் மாகாண, பிராந்திய அமைச்சர்கள் ஒன்றிணைந்தனர்.

ஆனாலும், கனடாவின் முதல்வர்கள் செவ்வாக்கிழமை (08) வெளியிட்ட அறிக்கை குறித்து அதிருப்தி அடைந்த மத்திய அரசாங்கம் ஒரு கூட்டு அறிக்கை, பின்னர் நடந்த செய்தி மாநாடு இரண்டிலிருந்தும் விலகியது.

Related posts

கிழக்கு Ontarioவில் உள்ள ஏரியில் விழுந்த 2 பேர் காணாமல் போயுள்ளனர்

Lankathas Pathmanathan

கனடாவில் குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் சுவாச நோய்!

Lankathas Pathmanathan

கனடிய ஆயுதப் படையினரை Albertaவில் சந்தித்த பிரதமர்

Leave a Comment