தேசியம்
செய்திகள்

அகதி கோரிக்கையாளர் மத்திய அதிகாரியின் முன்னர் தன்னை கத்தியால் குத்தினார்

அகதி கோரிக்கையாளர் ஒருவர் மத்திய அரசாங்க அதிகாரியின் முன்னர் தன்னை கத்தியால் குத்திய சம்பவம் Torontoவில் நிகழ்ந்தது.

கடந்த வாரம் கனடிய குடிவரவு அகதிகள், குடியுரிமை அதிகாரியுடன் ஒரு சந்திப்பின் போது, 22 வயதான பாலஸ்தீனிய அகதி Aziza Abusirdana வயிற்றில் தன்னைத் தானே குத்திக் கொண்டார்.

ஏழு மாதங்களாக Torontoவின் மேற்கே அகதிகள் விடுதியில் வசிக்கும் அவர் தனது கோரிக்கைகளை அரசாங்க அதிகாரிகள் செவிமடுக்கவில்லை என்ற விரத்தியை வெளிப்படுத்தினார்.

மத்திய அரசாங்க அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக தன்னைத் தானே வயிற்றில் குத்திக் கொள்ள முடிவு செய்ததாக Abusirdana கூறுகிறார்.

Related posts

தொற்றின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எச்சரிக்கை

Lankathas Pathmanathan

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் விசாரணையில் Durham கல்லூரி ஊழியர் கைது

Lankathas Pathmanathan

London நகர விபத்தில் 2 பேர் மரணம் – 8 பேர் காயம்!

Lankathas Pathmanathan

Leave a Comment