தேசியம்
செய்திகள்

Quebec கர்தினால் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவு

Quebec கர்தினால் Marc Ouellet மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

“F.” என மாத்திரம் அடையாளம் காணப்பட்ட ஒரு பெண் செவ்வாய்க்கிழமை (16) தாக்கல் செய்த நீதிமன்ற ஆவணங்களில் இந்த குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

2010 ஆம் ஆண்டு Quebec நகரில் நடந்த ஒரு நிகழ்வில் Ouellet தன்னை பல தேவையற்ற தொடுதல் சம்பவங்கள் மூலம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Quebecகின் உயர் மறைமாவட்டத்திற்கு எதிரான ஒரு வர்க்க நடவடிக்கை வழக்கில் குறிப்பிடப்பட்ட மதகுரு உறுப்பினர்கள், மறைமாவட்ட ஊழியர்களின் பட்டியலில் அவரது பெயர் அடங்குகிறது.

கர்தினால் Ouellet திருத்தந்தை ஆவதற்கு முன்னோடியாக கருதப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மூத்த விளையாட்டு ஊடகர் காலமானார்

Lankathas Pathmanathan

Liberal புதிய தலைவருக்கான முன்கூட்டிய வாக்களிப்பு புதன் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலகிய Erin O’Toole

Lankathas Pathmanathan

Leave a Comment