தேசியம்
செய்திகள்

Ripudaman Singh Malik கொலை வழக்கில் இருவர் மீது குற்றச்சாட்டு பதிவு!

Air இந்தியா விமான குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நபரை குறிவைத்து சுட்டுக் கொன்ற வழக்கில் 2 பேர் மீது முதல் நிலை கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

1985 ஆம் ஆண்டு நிகழ்ந்த Air இந்தியா விமான குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட Ripudaman Singh Malik கடந்த 14ஆம் திகதி British Colombia மாகாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்த கொலைக் குற்றச் சாட்டுகளை 21, 23 வயதான இருவர் எதிர்கொள்கின்றனர் .

இவர்கள் இருவர் மீதும் முதல் நிலை கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக British Colombia காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவர்கள் இருவருக்கும் முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பதை நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன.

Related posts

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி நாடாளுமன்ற அமர்வு கனடாவில் ஆரம்பம்!

Lankathas Pathmanathan

கனேடிய நாடாளுமன்றத்தின் இனப்படுகொலை தொடர்பான பிரேரணையை நிராகரிக்கும் இலங்கை

ஈரானில் உள்ள கனடியர்களை நாடு திரும்ப வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment