தேசியம்
செய்திகள்

1.7 மில்லியன் டொலர் போதைப் பொருள் மீட்கப்பட்ட PROJECT ENTRUST

Ontario மாகாணத்தில் 1.7 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

York பிராந்திய காவல்துறையின் புலனாய்வாளர்கள் முன்னெடுத்த இது குறித்த விசாரணையின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

June 2021 இல் ஆரம்பமான PROJECT ENTRUST என்ற போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முறியடிக்கும் இந்த விசாரணையில் சந்தேக நபர்களுக்கு எதிராக 113 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Ontario முழுவதும் 19 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 23 ஆயிரம் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களும், 136, 000 டொலர் பணமும் சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Related posts

கனடியர்களுக்கு e-visa நடைமுறையை மீண்டும் ஆரம்பித்த இந்தியா

Lankathas Pathmanathan

Terrebonne தேர்தல் முடிவை இரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

Lankathas Pathmanathan

தமிழர்களுக்கு சொந்தமான Scarborough மதுபான விடுதி துப்பாக்கி சூடு உட்பட வன்முறை சம்பவங்கள் குற்றச்சாட்டில் 10 பேர்!

Lankathas Pathmanathan

Leave a Comment