தேசியம்
செய்திகள்

கனேடிய சுற்றுலா பயணிகளின் தலையை துண்டித்து கொன்ற குற்றவாளிகள் சரண்

இரண்டு கனேடிய சுற்றுலா பயணிகளின் தலையை துண்டித்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டின் ஆயுததாரிகள் சரணடைந்துள்ளனர்.

கனேடிய சுற்றுலாப் பயணிகளான Robert Hall, John Ridsdel ஆகியோர் September 2015 இல் துப்பாக்கிதாரிகளால் கடத்தப்பட்டனர்.

தெற்கு பிலிப்பைன்சில் கடத்தப்பட்ட அவர்களின் தலை துண்டிக்கப்பட்டது.

இதில் குற்றம் சாட்டப்பட்டு நீண்டகாலமாக தேடப்பட்ட இரண்டு Abu Sayyaf போராளி தளபதிகள் வெள்ளிக்கிழமை (17) சரணடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சரணடைதல் எவ்வாறு, எப்போது ஏற்பாடு செய்யப்பட்டது என்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

Related posts

ஐ.நா. காலநிலை மாநாட்டின் புகைப்படப் போட்டியில் சிறந்த பரிசை வென்ற கனேடிய புகைப்படப் பத்திரிக்கையாளர்

Lankathas Pathmanathan

ஆறு பேரை கொலை செய்த இலங்கையருக்கு குறைந்தபட்சம் 25 ஆண்டு ஆயுள் தண்டனை

Lankathas Pathmanathan

தமிழ் பெண் பலியான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு!

Lankathas Pathmanathan

Leave a Comment