தேசியம்
செய்திகள்

Manitobaவில் எல்லை முற்றுகை அகற்றப்படும்: RCMP நம்பிக்கை

Manitobaவில் எல்லை முற்றுகை புதன்கிழமை (16) அகற்றப்படும் என RCMP நம்பிக்கை வெளியிட்டது

Emersonனில் உள்ள கனடா-அமெரிக்க எல்லை கடப்பில் உள்ள எதிர்ப்பு முற்றுகை புதன்கிழமை அகற்றப்படும் என Manitoba RCMP எதிர்பார்க்கிறது.

ஒரு தீர்மானம் எட்டப்பட்டதாக நம்புவதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் விரைவில் இந்தப் பகுதியை விட்டு வெளியேறுவார்கள் எனவும் RCMP அதிகாரிகள் கூறினர்.

இந்த முற்றுகை கடந்த வியாழக்கிழமை முதல் கனடா-அமெரிக்க எல்லை பயணத்தை தடை செய்துள்ளது.

இந்த விடயத்தில் அமைதியான தீர்வு காணப்பட்டுள்ளது என்ற அறிவித்தலால் மகிச்சியடைவதாக முதல்வர் Heather Stefanson, நீதி அமைச்சர் Kelvin Goertzen ஆகியோர் கூறினர்.

Related posts

கனடாவில் தமிழ்ச் சமூக மையம் செயல்திட்டத்திற்கு 26.3 மில்லியன் டொலர்கள் நிதி உதவி

Gaya Raja

பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்று!

Gaya Raja

கடந்த ஆண்டில் கனடாவில் 740க்கும் மேற்பட்ட கொலைகள் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment