தேசியம்
செய்திகள்

தலைநகர் போராட்டம் முற்றுகையாக மாறியுள்ளது: Ottawa நகர முதல்வர்

கனடாவின் தலைநகர் Ottawa தொடர்ந்தும் அவசர கால நிலையின் கீழ் உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (06) Ottawa நகருக்கான அவசர கால நிலையை நகர முதல்வர் Jim Watson அறிவித்தார்.

Ottawaவில் தொடரும் எதிர்ப்பு போராட்டம் தலை நகரின் சில பகுதிகளை தொடர்ந்து முடக்கியுள்ளது.

Ottawa நகர முதல்வர் Watson, Ontario முதல்வர் Doug Ford, கனடிய பிரதமர் Justin Trudeau ஆகியோருக்கு திங்களன்று கடிதங்களை அனுப்பினார்.

தொடரும் போராட்டம் Ottawa மத்திய பகுதியின் முற்றுகையாக மாறியுள்ளது என அந்த கடிதத்தில் நகர முதல்வர் Watson குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் போராட்டங்களை கட்டுப்படுத்த மேலதிக உதவிகள் கோருவதாக Ottawa காவல் துறையின் தலைவர் Peter Sloly கூறினார்.

போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 20 குற்றவியல் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

Related posts

கனடாவில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

வார விடுமுறையில் இடியுடன் கூடிய காற்று வீசியதில் பலியானவர்களின் எண்ணிக்கை பதினொன்றாக அதிகரிப்பு

Lankathas Pathmanathan

மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கனடியத் தமிழருக்கு எதிரான குற்ற விசாரணைக்கு திகதி நிர்ணயம்

Lankathas Pathmanathan

Leave a Comment