தேசியம்
செய்திகள்

தலைநகர் போராட்டம் முற்றுகையாக மாறியுள்ளது: Ottawa நகர முதல்வர்

கனடாவின் தலைநகர் Ottawa தொடர்ந்தும் அவசர கால நிலையின் கீழ் உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (06) Ottawa நகருக்கான அவசர கால நிலையை நகர முதல்வர் Jim Watson அறிவித்தார்.

Ottawaவில் தொடரும் எதிர்ப்பு போராட்டம் தலை நகரின் சில பகுதிகளை தொடர்ந்து முடக்கியுள்ளது.

Ottawa நகர முதல்வர் Watson, Ontario முதல்வர் Doug Ford, கனடிய பிரதமர் Justin Trudeau ஆகியோருக்கு திங்களன்று கடிதங்களை அனுப்பினார்.

தொடரும் போராட்டம் Ottawa மத்திய பகுதியின் முற்றுகையாக மாறியுள்ளது என அந்த கடிதத்தில் நகர முதல்வர் Watson குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் போராட்டங்களை கட்டுப்படுத்த மேலதிக உதவிகள் கோருவதாக Ottawa காவல் துறையின் தலைவர் Peter Sloly கூறினார்.

போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 20 குற்றவியல் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

Related posts

கனடாவில் நேற்று மாத்திரம் 97  புதிய COVID மரணங்கள்

Lankathas Pathmanathan

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்: முரளி கிருஷ்ணன்

Gaya Raja

NDP தலைவரின் அரசியல் எதிர்காலம் குறித்து எழும் கேள்விகள்!

Lankathas Pathmanathan

Leave a Comment