தேசியம்
செய்திகள்

தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

கனடியத் தமிழர்களின் தொடர் பங்களிப்பிற்கு பிரதமர் Justin Trudeau நன்றி தெரிவித்தார்.

திங்கட்கிழமை (17) நடைபெற்ற தைப்பொங்கல், தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டார்.

தமிழ்க் கனடியர்கள் இந்த நாட்டின் சமூக, பொருளாதார, பண்பாட்டு துறையில் வழங்கும், பங்களிப்பிற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

மெய்நிகர் வழியாக நடைபெற்ற இந்த நிகழ்வை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரியின் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் தமிழரான பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், Toronto நகர முதல்வர் John Tory,, நகரசபை உறுப்பினர்கள், தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

Scarborough Centre தொகுதியில் மாகாணசபை தேர்தல் வேட்பாளராகும் நீதன் சான்!

Lankathas Pathmanathan

உக்ரைன் போரில் பங்கேற்ற கனேடியர் மரணம்!

Lankathas Pathmanathan

Ontarioவில் நோய் வாய்ப்பட்ட காலத்திற்கான விடுப்பு ஊதியத் திட்டம் அறிவிப்பு!

Gaya Raja

Leave a Comment