தேசியம்
செய்திகள்

கனடாவில் போதுமான குழந்தைகள் தடுப்பூசியை பெறவில்லை: பிரதமர் Trudeau

கனடாவில் போதுமான குழந்தைகள் COVID தடுப்பூசியை பெறவில்லை என பிரதமர் Justin Trudeau கூறினார்.

Omicron, சுகாதாரப் பாதுகாப்பை அச்சுறுத்தும் நேரத்தில் போதுமான கனடிய குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி போடப்படவில்லை என பிரதமர் Trudeau புதன்கிழமை (12) தெரிவித்தார்.

January 1 ஆம் திகதி வரை, 12 வயதுக்கு மேற்பட்ட கனடியர்களில் 87.6 சதவீதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.

ஆனால் 5 முதல் 12 வயதுடையவர்களில் அந்த எண்ணிக்கை வெறும் 2 சதவீதமாக உள்ளது.

5 முதல் 12 வயதுடையவர்களில் 45.6 சதவீதமானவர்கள் ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

நீங்கள் தடுப்பூசி போட முடியுமா என உங்கள் பெற்றோரிடம் கேளுங்கள் என புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது Trudeau நேரடியாக குழந்தைகளிடம் கோரினார்.

Related posts

15 வயது சிறுவன் RCMP அதிகாரிகளால் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

முதற்குடியினரின் வத்திக்கானுக்கான பயணம் ஒத்தி வைப்பு

Lankathas Pathmanathan

கனடாவில் மீளக்குடியமர்த்தப்படவுள்ள மேலும் 20 ஆயிரம் ஆப்கானியர்கள்!

Gaya Raja

Leave a Comment