தேசியம்
செய்திகள்

பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மருத்துவமனைகளுக்கு சர்வதேச அளவில் படித்த செவிலியர்களை அனுப்ப Ontario முடிவு

பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மருத்துவமனைகளுக்கு சர்வதேச அளவில் படித்த செவிலியர்களை அனுப்ப Ontario முடிவு செய்துள்ளது.

சுகாதார அமைச்சர் Christine Elliott  செவ்வாய்க்கிழமை (11) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

COVID காரணமாக பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மருத்துவமனைகளுக்கும்  நீண்ட கால பராமரிப்பு இல்லங்களுக்கும்  சர்வதேச அளவில் படித்த செவிலியர்கள் அனுப்பி வைக்கப்படுவர் என அவர் கூறினார்.

1,200க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர் எனவும்  Elliott தெரிவித்தார்.

இந்த வார இறுதியில் மருத்துவமனைகளுக்கும் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களுக்கும் இவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என  Elliott கூறினார்.

Related posts

Gordie Howe மேம்பாலம் இந்த வாரம் திறக்கப்படும்: Mark Carney

Lankathas Pathmanathan

Toronto-St. Paul தொகுதிக்கான மத்திய இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

நான்கு புதிய கடவுச்சீட்டு சேவை மையங்கள் திறப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment