தேசியம்
செய்திகள்

தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க Quebec முடிவு செய்துள்ளது.

மருத்துவம் அல்லாத காரணங்களுக்காக COVID  தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என முதல்வர் François Legault செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

செவ்வாய் (11) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து நிதியமைச்சருடனும் மாகாண சட்ட ஆலோசகர்களுடன் மாகாணம் ஆலோசனை நடத்தி வருகிறது.

Quebec மாகாணத்தில் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

 

Related posts

Conservative கட்சியின் மூன்றாவது தலைமைத்துவ விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை: Pierre Poilievre

பிரதமரை அச்சுறுத்திய குற்றத்தை ஒருவர் ஒப்புக் கொண்டார்!

Lankathas Pathmanathan

Ontarioவிலும் Quebecகிலும் அதிக அளவில் பனிப்பொழிவு

Lankathas Pathmanathan

Leave a Comment