தேசியம்
செய்திகள்

Saskatchewan சுய-தனிமை தேவைகளிலும் சோதனை விதிகளிலும் மாற்றம்

Saskatchewan அரசாங்கம் அதன் சுய-தனிமை தேவைகளிலும் சோதனை விதிகளிலும் மாற்றங்களைச் செய்து வருகிறது.
சுய-தனிமைப்படுத்தல் காலம் 10 நாட்களில் இருந்து ஐந்து நாட்களுக்கு குறைக்கப்படுகிறது.

தடுப்பூசி போடப்படாதவர்கள் அல்லது பகுதியளவு தடுப்பூசி போடப்பட்டவர்கள் தொடர்ந்து  10 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என இன்று அறிவிக்கப்பட்டது.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் நோயறிதலை உறுதிப்படுத்த PCR பரிசோதனையை பெற வேண்டிய அவசியமில்லை எனவும் ஐந்து நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது .

தொற்றின் அறிகுறிகள் உள்ளவர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்கள், நீண்ட கால மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களைக் கவனிப்பவர்கள் போன்ற முன்னுரிமை மக்களுக்கும் PCR சோதனை தொடர்ந்தும் பரிந்துரைக்கப்படுகிறது.

Saskatchewan சுகாதார ஆணையத்தின் சோதனைத் தளங்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சி இது என முதல்வர்  Scott Moe  கூறினார்.

Related posts

வரவு செலவுத் திட்டத்தில் கனேடியர்களுக்கு நேரடியாக உதவும் திட்டங்கள் அடங்கும்

Lankathas Pathmanathan

Saskatchewan மாகாணம் 2026-27ஆம் ஆண்டுக்குள் சமநிலைக்குத் திருப்பும்: நிதி அமைச்சர்

Lankathas Pathmanathan

கனடிய தமிழர் பேரவை மீதான தடையை நீக்கும் ஸ்ரீலங்கா

Lankathas Pathmanathan

Leave a Comment