தேசியம்
செய்திகள்

குளிர்கால Olympics போட்டிகளை புறக்கணிக்கும் கனடா!

Beijing குளிர்கால Olympics போட்டிகளின் இராஜதந்திர புறக்கணிப்பில் கனடா இணைகிறது.

2022 Olympic, Paralympic போட்டிகளை இராஜதந்திர ரீதியில் புறக்கணிப்பதாக புதன்கிழமை (08) நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் Justin Trudeau அறிவித்தார்.

இந்த முடிவின் மூலம், கனடிய அரசாங்க அதிகாரிகள் Beijing குளிர்கால போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என பிரதமர் கூறினார்.

இந்த அறிவித்தலின் போது பிரதமருடன், வெளியுறவு அமைச்சர் Melanie Joly, விளையாட்டுதுறை அமைச்சர் Pascale St-Onge ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சீன அரசாங்கத்தின் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களால் மிகவும் கவலை அடைந்துள்ளதாக பிரதமர் Trudeau இந்த அறிவித்தலின் போது  கூறினார்.
அதனால் இந்த குளிர்கால Beijing Olympic, Paralympic போட்டிகளுக்கு தூதரக பிரதிநிதிகள் எவரையும் அனுப்ப மாட்டோம் என அறிவிப்பதாக Trudeau தெரிவித்தார்.

கனடிய விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கலாம் எனவும்  அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் பல முன்னாள் இராஜதந்திரிகளும் சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்களும் கனடா இந்த Olympics போட்டிகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர்.

விளையாட்டு வீரர்களை அரசியல் சர்ச்சையிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என அமைச்சர் Joly வலியுறுத்தினார்.

Related posts

Ontarioவின் சுகாதார அமைச்சர்தடுப்பூசி பெறுவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு!

Gaya Raja

November 21 தமிழீழத் தேசியக் கொடி நாள்: அங்கீகரித்தது Brampton

Lankathas Pathmanathan

இந்தியாவுக்கு எதிராக கனடாவில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் கண்டனம்

Lankathas Pathmanathan

Leave a Comment