தேசியம்
செய்திகள்

ArriveCan செயலியை பயன்படுத்த மறந்த பயணிகள் எல்லையில் தமது விவரங்களைத் தெரிவிக்கலாம்

ArriveCan செயலியை பயன்படுத்த மறந்த பயணிகள் எல்லையில் தமது விவரங்களைத் தெரிவிக்கலாம் என திங்கட்கிழமை (06) அறிவிக்கப்பட்டது.
மீண்டும் கனடாவுக்குள் நுழைவதற்கு  ArriveCAN செயலி கட்டாயமானது என கடந்த வாரம் கனடிய அரசாங்கம் நினைவூட்டியது.
ஆனாலும்  கனடியப் பயணிகள் தமது பயண விவரங்களை நேரில் வழங்க அனுமதிக்கும்  புதிய வழிமுறைகளை கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர், எல்லை அதிகாரிகளுக்கு திங்கட்கிழமை வழங்கினார்.
அரசாங்கத்தின் ArriveCan செயலியை பயன்படுத்த முடியாதவர்கள் அல்லது அதை நிரப்ப மறந்தவர்கள் தமது யண விவரங்களை நேரில் வழங்க அனுமதிக்கப்படும் என திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.

Related posts

பெரும்பாலான P.E.I குடியிருப்பாளர்கள் தொடர்ந்தும் மின்சாரம் இல்லாத நிலை

Lankathas Pathmanathan

முன்னாள் வதிவிட பாடசாலைகளுக்கு செல்லவுள்ள பாப்பரசர்

Lankathas Pathmanathan

கனடிய தமிழர் பேரவைக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment