தேசியம்
செய்திகள்

பயணிகள் கனடாவுக்குள் நுழைவதற்கு ArriveCAN செயலி கட்டாயமானது

கனடியப் பயணிகள் மீண்டும் கனடாவுக்குள் நுழைவதற்கு ArriveCAN செயலி கட்டாயமானது என கனடிய அரசாங்கம் நினைவூட்டுகிறது.

சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்த நினைவூட்டலை வெளியிட்டார். தடுப்பூசி போடப்பட்ட கனடியர்கள் ArriveCAN செயலியை உபயோகிக்காத நிலையில் தனிமைப் படுத்தப்பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானதாக கனடா-அமெரிக்க நில எல்லையில் ஏற்பட்ட குழப்பத்தின் விளைவாக இந்த நினைவூட்டல் வெளியானது.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனடியர்கள் 72 மணி நேரத்திற்கு குறைவாக பயணம் மேற்கொண்ட பின்னர் மீண்டும்  நாட்டிற்குள் நுழையும் போது எதிர்மறையான PCR சோதனையை வழங்கத் தேவையில்லை என கடந்த மாதம் விதிகள் மாற்றப்பட்டன.

இருப்பினும், பயணிகள் கனடாவுக்கு வருவதற்கு முன் ArriveCAN செயலியில் தடுப்பூசி போட்டதற்கான ஆதாரம், பயணத் திகதி, தனிமைப்படுத்தப்பட்ட திட்டம் உள்ளிட்ட கட்டாயத் தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Maple Leafs அணியின் புதிய பொது மேலாளர் நியமனம்

Lankathas Pathmanathan

உள்நாட்டு வர்த்தக தடைகளை விலக்க பிரதமரும் முதல்வர்களும் இணக்கம்

Lankathas Pathmanathan

Ontario இலையுதிர் கால பொருளாதார அறிக்கை விரைவில்

Lankathas Pathmanathan

Leave a Comment