November 13, 2025
தேசியம்
செய்திகள்

Remembrance தினத்திற்கு முன்னும் பின்னும் கனடிய கொடிகள் உயர்த்தப்பட உள்ளன!

Remembrance தினத்திற்கு முன்னும் பின்னும் மத்திய அரசாங்கத்தின் கட்டிடங்களில் கனடிய கொடிகள் உயர்த்தப்பட உள்ளன.

கனடிய மத்திய அரசாங்கம் வெள்ளிக்கிழமை இந்த முடிவை அறிவித்தது.

அடுத்த வாரம் முதற்குடி படைவீரர் தினம் மற்றும் நினைவு தினத்திற்காக மத்திய அரசாங்க கட்டிடங்கள் மற்றும் அமைதி கோபுரத்தின் மீது கனடிய கொடிகளை உயர்த்தி மீண்டும் அரைக் கம்பத்தில் குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதன் பின்னர் கொடிகள் முழு கம்பத்திற்கு திரும்புவுள்ளன.

Kamloops, British Colombiaவில் உள்ள ஒரு முன்னாள் குடியிருப்புப் பாடசாலையில் முதன் முறையாக பெயர் குறிக்கப்படாத கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து May மாத இறுதியில் கனடிய கொடிகள் அரைக் கம்பத்திற்கு தாழ்த்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

$1 பில்லியன் மதிப்புள்ள COVID தடுப்பூசிகள் விரைவில் காலாவதியாகும்

Lankathas Pathmanathan

COVID மரணங்கள் 35 ஆயிரத்தை தாண்டியது

Lankathas Pathmanathan

அகதி கோரிக்கையாளர் மத்திய அதிகாரியின் முன்னர் தன்னை கத்தியால் குத்தினார்

Lankathas Pathmanathan

Leave a Comment