தேசியம்
செய்திகள்

தலிபான் பிரதிநிதிகளை சத்தித்த கனடா அதிகாரிகள்!

கனடா அதிகாரிகள் கத்தாரில் தலிபான் பிரதிநிதிகளை சந்தித்தனர்.

கனடா உட்பட மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் வியாழக்கிழமை கத்தாரில் தலிபான் அதிகாரிகளைச் சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பில் போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கான மனிதாபிமான உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் பொருளாதார நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஊடாகவும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாகவும் உதவ கனேடிய அரசு தயாராக உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் தாலிபான்களுக்கு கனேடிய அரசு நேரடியாக உதவி அல்லது பணத்தை வழங்காது என அமைச்சர் Dominic LeBlanc கடந்த வாரம் கூறியிருந்தார்.

Related posts

ISIS தடுப்பு முகாமில் இருந்து விடுதலையான கனடா பெண்!

Gaya Raja

September 10ஆம் திகதிக்குள் Conservative கட்சிக்கு புதிய தலைவர்

Lankathas Pathmanathan

பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்து கனடிய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது!

Lankathas Pathmanathan

Leave a Comment