கனடாவின் புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க கனடிய அரசாங்கம் ஜெர்மானிய நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இதன் முதல் நான்கு கப்பல்களும் 2034-ஆம் ஆண்டிற்குள் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடிய கடற்படைக்காக 12 புதிய நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொள்வனவு செய்வது தொடர்பான ஒப்பந்தம் TKMS நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
ஜெர்மானிய நிறுவனமான TKMS, 2034-ஆம் ஆண்டுக்குள் கனடாவுக்குப் புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கவுள்ளது.
பிரதமர் Mark Carney திங்கட்கிழமை (06) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
NATO மாநாட்டில் கலந்து கொள்வதற்கு துருக்கி பயணமாகும் வழியில் பிரதமர் Halifax நகரில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கனடாவின் பிரம்மாண்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தைக் கைப்பற்றுவதற்காக இரண்டு சர்வதேச நிறுவனங்கள் இறுதிப் போட்டியில் களமிறங்கின.
ஜெர்மனி, நோர்வேயின் கூட்டு நிறுவனமான ThyssenKrupp Marine Systems (TKMS), தென் கொரியாவின் Hanwha நிறுவனம் என்பனவே இவ்வாறு நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்திற்கு போட்டியிட்டன.
இந்த ஒப்பந்தத்தை பெற்றதன்மூலம் கனடாவில் $160 பில்லியன் மதிப்பிலான பொருளாதார நடவடிக்கைகளையும், $86 பில்லியன் GDP பங்களிப்பையும், 6,50,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவதாக TKMS உறுதியளிக்கிறது.
கனடாவின் மிகப்பெரிய இராணுவ கொள்முதலாக இது அமைகிறது.
இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழ் 12 நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொள்வனவு செய்வது கனடிய இராணுவ நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு மாற்றாக அமையவுள்ளன.
