இந்தியாவில் இருந்து கனடாவுக்கு வந்த சில நாட்களிலேயே மனைவியை கொலை செய்ததாக ஒருவர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
கனடாவிற்கு வந்த சில நாட்களிலேயே, British Colombia-வின் Abbotsford நகரில் தனது மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த நபருக்கு இரண்டாம் நிலை கொலைக் குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
41 வயதான Balwinder Kaur மரணம் தொடர்பாக Jagpreet Singh மீது குற்றம் சாட்டப்பட்டது.
March 15, 2024 அன்று தனது இல்லத்தின் நிலக்கீழ் அறையில் பலமுறை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் Balwinder Kaur உடல் கண்டெடுக்கப்பட்டது.
தனக்கு எதிராக குறைவான குற்றமான கொலைக்குற்றம் மட்டுமே சுமத்தப்பட வேண்டும் என Jagpreet Singh வாதிட்டார்.
தான் திடீர் ஆத்திரத்தால் ஏற்பட்ட உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மனைவியை கொன்றதாக நீதிமன்றத்தில் Jagpreet Singh கூறினார்.
இந்த கத்திக்குத்துச் சம்பவம், Balwinder Kaur முதலில் தன்னை நோக்கி கத்தியை வீசியதால் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதன் விளைவே என Jagpreet Singh கூறினார்.
Balwinder Kaur-ரிடம் இருந்த ஆயுதத்தைப் பறிக்க முயன்றபோது, ”தவறுதலாகக் கத்தியால் அவரது வயிற்றில் குத்திவிட்டதாக” Balwinder Kaur நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்பிறகு என்ன நடந்தது என்பது தனக்கு நினைவில்லை எனவும் அவர் கூறினார்.
கழுத்து, மார்பு பகுதிகளில் ஏற்பட்ட ஏழு குத்து காயங்களால் ஏற்பட்ட அதிகப்படியான இரத்த இழப்பு இந்த உயிரிழப்புக்கு காரணம் என பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.
Balwinder Kaur ரைக் கொல்லும் நோக்கம் குறித்து நியாயமான சந்தேகத்தை எழுப்பத் தவறிய, “நம்பகத்தன்மையற்ற, உறுதியற்ற சாட்சியங்களையே Jagpreet Singh வழங்கியதாகக் கண்டறிந்த B.C. உச்ச நீதிமன்ற நீதிபதி Andrea Ormiston, அவரது வாதத்தை நிராகரித்தார்.
அப்போது 51 வயதாக இருந்த Jagpreet Singh, கொலைக்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக, 2024 March 9 அன்று இந்தியாவிலிருந்து கனடாவுக்கு வந்து சேர்ந்தார்.
பல்கலைக்கழகப் படிப்பிற்காக கனடா வந்திருந்த தங்கள் மகளுக்கு உதவுவதற்காக, Balwinder Kaur 2022-இல் கனடாவுக்கு சென்றிருந்தார்.
இந்த வழக்கில் தண்டனை அறிவிக்கப்படும் திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.
