சரிந்து செல்லும் செல்வாக்கு குறித்த கருத்து கணிப்புகளை Ontario முதல்வர் மறுக்கிறார்.
இப்போது ஒரு தேர்தல் நடத்தப்பட்டால் தன்னால் பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க முடியும் என Doug Ford கூறினார்.
முதல்வரின் ஆதரவு சரிந்து செல்வது குறித்து அவர் பங்கேற்கும் நிகழ்வுகளில் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இப்போது ஒரு தேர்தல் நடத்தப்பட்டால் Ontario வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், நாங்கள் மற்றொரு மாபெரும் பெரும்பான்மையை அமைப்போம் என செவ்வாய்க்கிழமை (23) Toronto-வில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் Doug Ford கூறினார்.
Angus Reid வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளை “போலி” என கூறியதன் மூலம் முதல்வர் சமீபத்தில் செய்திகளில் இடம் பிடித்தார்.
இந்தக் கருத்துக்காக Ontario முதல்வருக்கு Angus Reid கருத்துக் கணிப்பு நிறுவனம் சட்டப்பூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
Doug Ford தனது கருத்தை மீளப் பெற Angus Reid தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.
Doug Ford கனடாவின் மிகவும் செல்வாக்கற்ற முதல்வராக Angus Reid கடந்த மாதம் வெளியிட்ட ஒரு கருத்துக் கணிப்பில் தரவரிசைப் படுத்தப்பட்டார்
இந்தக் கருத்துக் கணிப்பில் அவரது ஆதரவு 21 சதவீதமாக இருந்தது.
இது அவரது எட்டு ஆண்டு பதவிக் காலத்தில் இல்லாத அளவுக்கு குறைவானதாகும்.
கடந்த வாரம், Doug Ford இந்தக் கருத்துக் கணிப்பை போலி என நிராகரித்தார்.
PC கட்சிக்கு 41 சதவீதமும், அதைத் தொடர்ந்து Liberal கட்சிக்கு 27 சதவீதமும், NDP கட்சிக்கு 21 சதவீதமும், பசுமைக் கட்சிக்கு ஏழு சதவீதமும் கிடைத்துள்ளதாக கூறிய உள் வாக்கெடுப்பு எண்களையும் Doug Ford பகிர்ந்து கொண்டார்.
இது PC ஆதரவு கருத்து கணிப்பாளர் நிறுவனம் அண்மையில் இணையத்தில் பகிர்ந்த எண்களை ஒத்ததாகும்.
சமீபத்தில் பகிரங்கமாக வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகள் எதுவும் ஒருமித்த கருத்தை வெளியிடவில்லை .
சில கணிப்புகள் Liberal கட்சியும், PC கட்சியும் சமநிலையில் இருப்பதையோ அல்லது அவர்களை விட முன்னணியில் இருப்பதையோ காட்டியுள்ளன.
அதே சமயம் ஏனைய சில கருத்து கணிப்புகள் PC கட்சியினர் ஐந்து முதல் பத்து புள்ளிகள் வரை முன்னிலை வகிப்பதை காட்டியுள்ளன..
இந்த நிலையில் தனக்கான செல்வாக்கு குறைந்து வருவதாக கூறப்படுவதை Doug Ford மீண்டும் மறுத்துள்ளார்.
