நிலையான குடியேற்றம் குறித்து மத்திய, மாகாண, பிராந்திய குடிவரவு அமைச்சர்கள் சந்தித்து உரையாடினர்.
குடியேற்றத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் மன்றம் செவ்வாய்க்கிழமை (23) கூடியது.
2027–2029 குடியேற்ற அளவுகள் திட்டத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், மத்திய, மாகாண, பிராந்திய முன்னுரிமைகளை விவாதிப்பதற்கும் இந்த சந்திப்பு முன்னெடுக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் அமைச்சர்கள் எதிர்கால நோக்கு குறித்த கலந்துரையாடல்களை நடத்திய அதேவேளையில், சமீபத்திய சீர்திருத்தங்களின் செயலாக்கத்தையும் ஆய்வு செய்தனர்.
2027-ஆம் ஆண்டுக்குப் பின்னர், நிரந்தர வசிப்பாளர் அனுமதியை மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதத்திற்கும் குறைவாக நிலைப்படுத்துவதற்கான மத்திய அரசின் உறுதிப்பாடு குறித்து அமைச்சர்கள் விவாதித்தனர்.
2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் தற்காலிக மக்கள் தொகையை மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதத்திற்கு குறைவாக குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
