கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான “பிளவுபட்டு வரும்” உறவை மீட்டெடுக்க வேண்டும் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
இரு நாடுகளிலும் பாதுகாப்பை உறுதி செய்ய இது அவசியம் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் Markwayne Mullin கூறினார்.
புதன்கிழமை (17) அமெரிக்க தலைநகர் Washington-னில் கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியுடன் நடத்திய கலந்துரையாடலின் போது Markwayne Mullin இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வாதங்கள் குற்றச் செயல்களுக்கான பலவீனங்களை மட்டுமே வெளிப்படுத்துகின்றன எனவும் அவர் கூறுகிறார்.
Mexico எல்லையில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டுள்ள கடுமையான நடவடிக்கையானது, கனடாவிலிருந்து எல்லை தாண்டி வரும் குற்றச் செயல்கள் அதிகரிக்க வழிவகுத்துள்ளது எனவும் Markwayne Mullin தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி Donald Trump-பின் வரிகள், கனடாவை அமெரிக்காவின் 51-ஆவது மாநிலமாக இணைத்துக் கொள்வோம் என்ற அச்சுறுத்தல்களால் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு சீர்குலைத்து வருகிறது.
Fentanyl புழக்கத்தை காரணம் காட்டி, கனடா மீது வரிகளை விதிக்கும் நோக்கில், Doanld Trump கடந்த ஆண்டு கனடிய-அமெரிக்க எல்லையில் அவசர நிலையை அறிவித்தார்.
கனடாவின் மேம்படுத்தப்பட்ட எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும், எல்லை தாண்டி சட்டவிரோதப் பொருட்களின் புழக்கம் கணிசமாகக் குறைந்திருப்பதையும் ஹரி ஆனந்தசங்கரி இந்த கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டினார்.
