கனடிய பிரதமர் Mark Carney இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பபட்டுள்ள நிலையில் இந்தப் பயணம் முன்னெடுக்கப்படுகிறது.
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில், சமீபத்திய மாதங்களில் கனடிய பிரதமர் மேற்கொண்ட தொடர்ச்சியான உலகளாவிய பயணங்களின் அடுத்த கட்டமாக இது அமைகிறது.
கனடாவை அமெரிக்காவை பொருளாதார ரீதியாக சார்ந்திருப்பதிலிருந்து விலக்க, வர்த்தக உறவுகளை வளர்ப்பதற்கான தனது சமீபத்திய முயற்சியாக பிரதமர் இந்தப் பயணத்தை முன்னெடுக்கிறார்.
பிரதமர் Mark Carney இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு February 26 முதல் March 7 வரை பயணம் மேற்கொள்வார் என கனடிய அரசாங்கம் திங்கட்கிழமை (23) தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை (26) இந்தியாவில் தனது பயணத்தை Mark Carney ஆரம்பிப்பார் எனவும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
2023-ஆம் ஆண்டில் கனடிய மண்ணில் ஒரு சீக்கிய தலைவரை கொன்றதாக முன்னாள் பிரதமர் Justin Trudeau இந்தியா மீது குற்றம் சாட்டியதை தொடர்ந்து மோசமடைந்த கனடா-இந்தியா உறவுகளில் இது குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் குறிக்கிறது.
மூன்று நாடுகளுக்கான தனது பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese , ஜப்பானியப் பிரதமர் Sanae Takaichi ஆகியோரை Mark Carney சந்திப்பார் என கனடிய அரசாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் Mark Carney உரையாற்றவுளார்.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் கனடிய பிரதமர் ஒருவர் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஆற்றும் முதல் உரை இதுவாகும்.
எரிசக்தி, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, முக்கியமான கனிமங்கள் போன்ற துறைகளில் கூட்டாண்மைகளை விரிவுபடுத்துவது இந்தப் பயணங்களின் நோக்கமாகும் எனவும் கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
