இலங்கையைச் சேர்ந்த நபர் மீது குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு Toronto காவல்துறையினரால் சுமத்தப்பட்டுள்ளது.
Toronto நகரம் முழுவதும் மக்களைப் படம் பிடித்தது உட்பட பல சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவியல் துன்புறுத்தல் விசாரணையை தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக Toronto காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைதானவர் 45 வயதான Mohamed Askar Mohamed-Razik என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவருக்கு எதிராக Toronto நகரம் முழுவதும் நான்கு தனித்தனி வழக்குகளில் நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
December 10, 2025 அன்று, இவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன என சனிக்கிழமை (07) வெளியான செய்திக்குறிப்பில் Toronto காவல்துறையினர் தெரிவித்தனர்.
June 8, August 21, September 27, October 4 ஆகிய தினங்களில் நிகழ்த்த சம்பவங்களின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகள் பதிவாகின.
இவருக்கு எதிரான எதிரான குற்றசாட்டுகள் எதுவும் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
