தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய அரசாங்கம் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என Conservative தலைவர் Pierre Poilievre புதன்கிழமை (03) தெரிவித்தார்.
தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டம் இளம் கனடியர்களுக்கு வேலை தேடுவதை கடினமாக்கி உள்ளது என அவர் தெரிவித்தார்.
எமது இளைஞர்களை வேலைகளிலிருந்து நீக்கி, அவர்களுக்கு பதிலாக ஏழை நாடுகளைச் சேர்ந்த குறைந்த ஊதியம் பெறும், தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களை ஏன் நியமிக்கிறார்கள் என்ற கேள்விக்கு Liberal அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என Pierre Poilievre தெரிவித்தார்.
