2035-ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிடுவதற்கு கனடா உறுதியளித்தது.
2035 ஆம் ஆண்டுக்குள் கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்து சதவீதத்தை பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்யும் என பிரதமர் Mark Carney உறுதியளித்துள்ளார்.
இதன் மூலம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகப்பெரிய பாதுகாப்பு முதலீட்டு அதிகரிப்பை கனடா அறிவித்துள்ளது.
இது ஆண்டுக்கு பில்லியன் கணக்கான செலவுகளை அதிகரிக்கும் ஒரு உறுதி மொழியாகும்.
கனடா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்து சதவீதத்தை எட்டுவது ஆண்டுக்கு $150 பில்லியனாகக் கணிக்கப்படுகிறது.
புதன்கிழமை நெதர்லாந்தில் நடைபெற்ற NATO கூட்டணியின் வருடாந்த தலைவர்கள் உச்சி மாநாட்டில் அநேக உறுப்பு நாடுகளும் இந்த புதிய உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இந்த மாத ஆரம்பத்தில், கனடா பாதுகாப்பு செலவினங்களுக்காக கூடுதலாக $9.3 பில்லியனை செலவிடும் எனவும், இந்த நிதியாண்டில் NATO -வின் முந்தைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீத இலக்கை அடையும் எனவும் Mark Carney அறிவித்திருந்தார்.
