தேசியம்
செய்திகள்

புதிய குடிவரவாளர்கள் மரணத்தில் இரண்டு பேர் மீது குற்றச்சாட்டு

கனடா-அமெரிக்க எல்லையில் நிகழ்ந்த புதிய குடிவரவாளர்கள் மரணத்தில் இரண்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Manitoba மாகாணத்தின் Emerson நகராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மரணித்த சம்பவத்தில் Harshkumar Patel, Steve Shand ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

Harshkumar Patel,

2022ல்  இந்திய வம்சாவளி குடும்பம் இறந்த இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க மத்திய வழக்கறிஞர்கள் இவர்கள் இருவர் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் Florida மாநிலத்தை சேர்ந்த இவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Steve Shand

January மாதம் 19ஆம் திகதி 2022ஆம் ஆண்டு 39 வயதான Jagdish Patel, 37 வயதான அவரது மனைவி Vaishali, அவர்களின் 11 வயது மகள் Vihangi, அவர்களின் மூன்று வயது மகன் Dharmik ஆகியோரின் உயிரற்ற உடல்கள்  அமெரிக்க எல்லையில் இருந்து 12 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 21ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Speed camera தடைக்கான முடிவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!

Lankathas Pathmanathan

Nova Scotiaவில் தடுப்பூசி வழங்கும் உதவியில் இராணுவம்

Lankathas Pathmanathan

Leave a Comment