தேசியம்
செய்திகள்

காணி அபகரிப்பு தொடர்பாக இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க கனடாவிடம் வலியுயுறுத்தல்!

காணி அபகரிப்பை நோக்கமாகக் கொண்ட அறிவித்தலை மீளப்பெறுவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு கனடா உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழ்த் தேசியப் பேரவையினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

இலங்கைக்கான கனடியத் தூதுவரை தமிழ்த் தேசியப் பேரவையினர் புதன்கிழமை (14) சந்தித்தனர்.

கொழும்பில் நிகழ்ந்த இந்த அவசர சந்திப்பில், காலத்துக்குக் காலம் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்த காணி சுவீகரிப்புகள் குறித்த விரிவான விபரங்கள் கனடிய தூதருக்கு எடுத்து கூறப்பட்டது.

சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் வர்த்தமானி அறிவிப்புகள் மூலம் கையகப்படுத்தியுள்ள காணிகள் குறித்த விபரங்களும் புள்ளி விபரங்களுடன் எடுத்துக் கூறப்பட்டது.

Related posts

Ontarioவில் மீண்டும் குறையும் எரிபொருளின் விலை

கனடிய தபால்களை ஏற்றுக்கொள்வதை அமெரிக்க தபால் சேவை இடை நிறுத்தியது

Lankathas Pathmanathan

அடுத்த வாரம் வெளியாகும் Ontarioவை மீண்டும் திறக்கும் திட்டத்தின் புதிய விவரங்கள்!

Gaya Raja

Leave a Comment