தேசியம்
செய்திகள்

கனடிய நாடாளுமன்றத்தில் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம்

தமிழின படுகொலையை நினைவு கூறும் “தமிழ் இனப்படுகொலை நினைவு தினம்” கனடிய நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெறுகிறது.

எதிர்வரும் May 18, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 15வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நாளாகும்.

May 18 தமிழின படுகொலை தினமாக கனடிய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது நினைவு தினமும் இதுவாகும்.

செவ்வாயன்று நடைபெறும்  நினைவு நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள்,  தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்துகொண்டு இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறுவார்கள்.

மாலை 4:30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த நிகழ்வு இரவு 6:30 மணி வரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

முடியரசு – பழங்குடியினர் உறவுகள் அமைச்சரும் Scarborough-Rouge Park நாடாளுமன்ற உறுப்பினருமான ஹரி ஆனந்தசங்கரி இந்த நினைவு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார்.

Related posts

AstraZeneca தடுப்பூசிகள் பாவனைக்கு பாதுகாப்பானவை: Health கனடா அறிவிப்பு!

Gaya Raja

Liberal-NDP கூட்டணி மாகாணங்களுடன் மோதலை தூண்டும்: Quebec முதல்வர்

Lankathas Pathmanathan

COVID தொற்று கனடாவில் மீண்டும் மோசமடைகின்றது

Lankathas Pathmanathan

Leave a Comment