தேசியம்
செய்திகள்

இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் கோரும் பிரதமருக்கான மனுவில் 286 ஆயிரம் பேர் கையெழுத்த்து

இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி பிரதமர் Justin Trudeauவை வலியுறுத்தும் மனுவில் 286,000 பேர் கையெழுத்திட்டனர்.

கடந்த வியாழக்கிழமை (23) நிறைவுக்கு வந்த இந்த மனுவுக்கு ஆதரவான கையெழுத்து கோரிக்கையில் 286,719 பேர் கையெழுத்திட்டனர்.

புதிய ஜனநாயக கட்சியின் இந்த ஆதரவு மனுவுக்கு பதிலளிக்க Liberal அரசாங்கத்திற்கு 45 நாட்கள் அவகாசம் உள்ளது.

காசா பகுதி மீதான முற்றுகையை நீக்குமாறு இஸ்ரேலை கேட்டுக் கொள்ளுமாறு இந்த மனு பிரதமரை வலியுறுத்துகிறது.

ஜெனீவா உடன்படிக்கைகள், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் இஸ்ரேல் தனது கடமைகளை நிறைவேற்ற இந்த மனு வலியுறுத்துகிறது.

பிரதமர் Justin Trudeau இதுவரை போர் நிறுத்தத்திற்கு வெளிப்படையாக அழைப்பு விடுக்கவில்லை.

மாறாக காசாவுக்குள் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கும் வகையில் யுத்தத்திற்கு தற்காலிக இடை நிறுத்தத்தை கோரியுள்ளார்.

Related posts

Londonனில் வெறுப்புணர்வை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வமத நடை பவனி

Gaya Raja

Atlantic பகுதி முழுவதும் சூறாவளி எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Caribbean பிராந்திய தலைவர்கள் கனடிய பிரதமர் சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment