தேசியம்
செய்திகள்

இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக போராட்டம்

கனடிய தலைநகரம் Ottawaவில் அமைந்துள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இன்று தமிழர்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று (புதன்)கனடிய நாடாளுமன்றம் நோக்கிய தமிழர்களின் வாகனப் பேரணியில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர் இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாகவும் ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர். Torontoவில் இருந்தும், Montrealலில் இருந்தும் இன்று காலை ஆரம்பமான வாகனப் பேரணி மாலை Ottawaவை சென்றடைந்தது.

இன்றைய வாகன பேரணியில் 100 வாகனங்கள் வரை Toronto, Montreal, Ottawa நகரங்களில் இருந்து பங்கேற்றன. இலங்கை அரசை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு கனடிய அரசிடம் கோரும் வகையில் இந்த வாகனப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய வாகன பேரணியின் இறுதியில் மகஜர் ஒன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியிடம் கையளிக்கப்பட்டது.

Related posts

கனடிய பிரதமர் – ஐரோப்பிய ஆணையத் தலைவர் உரையாடல்

Lankathas Pathmanathan

September இறுதிக்குள் அனைத்து கனடியர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

கடவுச்சீட்டு விண்ணப்ப நிலுவை நீக்கப்பட்டுள்ளது!

Lankathas Pathmanathan

Leave a Comment