தேசியம்
செய்திகள்

இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக போராட்டம்

கனடிய தலைநகரம் Ottawaவில் அமைந்துள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இன்று தமிழர்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று (புதன்)கனடிய நாடாளுமன்றம் நோக்கிய தமிழர்களின் வாகனப் பேரணியில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர் இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாகவும் ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர். Torontoவில் இருந்தும், Montrealலில் இருந்தும் இன்று காலை ஆரம்பமான வாகனப் பேரணி மாலை Ottawaவை சென்றடைந்தது.

இன்றைய வாகன பேரணியில் 100 வாகனங்கள் வரை Toronto, Montreal, Ottawa நகரங்களில் இருந்து பங்கேற்றன. இலங்கை அரசை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு கனடிய அரசிடம் கோரும் வகையில் இந்த வாகனப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய வாகன பேரணியின் இறுதியில் மகஜர் ஒன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியிடம் கையளிக்கப்பட்டது.

Related posts

10 வருட சுகாதார பாதுகாப்பு நிதி திட்டத்தை முன்மொழிய தயாராகும் மத்திய அரசு?

Lankathas Pathmanathan

Novavax தடுப்பூசிக்குHealth கனடா அங்கீகாரம்

Lankathas Pathmanathan

Quebec சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கியூபாவில் விபத்து- ஒருவர் மரணம் – 26 பேர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment