தேசியம்
செய்திகள்

கனடாவிற்கு பயண அறிவுறுத்தல் விடுத்த இந்தியா!

கனடாவிற்கான பயண அறிவுறுத்தல் ஒன்றை இந்தியா வழங்கியுள்ளது.

கனடாவுக்கு பயணிக்கும் போது அவதானமாக இருக்குமாறு இந்தியா தனது குடிமக்களுக்கு புதன்கிழமை (20) அறிவுறுத்தியுள்ளது

புதுதில்லியில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம் புதுப்பிக்கப்பட்ட இந்த பயண அறிவுறுத்தலை வெளியிட்டது.

அதிகரித்து வரும் இந்திய-விரோத நடவடிக்கைகள் காரணமாக தனது நாட்டவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அந்த பயண அறிவுறுத்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கடந்த June மாதம் British Colombiaவில் கொல்லப்பட்டார்.

இந்த கொலையில் இந்திய அரசின் முகவர்கள் ஈடுபட்டதாக நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ளதாக கனடிய பிரதமர் Justin Trudeau நாடாளுமன்றத்தில் கூறினார்.

இதனால் விரிசலடைந்து வரும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு மத்தியில் இந்த பயண அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

Related posts

பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த விசாரணை?

Lankathas Pathmanathan

முன்னாள் வதிவிட பாடசாலைகள் குறித்து போப்பாண்டவர் மன்னிப்பு கோரவேண்டும் : வலுப்பெறும் அழைப்பு

Gaya Raja

செய்தியாளர் சந்திப்பில் மயங்கி வீழ்ந்த Montreal நகர முதல்வர்

Lankathas Pathmanathan

Leave a Comment