தேசியம்
செய்திகள்

காட்டுத்தீ காரணமாக வெளியேற்றப்பட்ட பலர் மீண்டும் வீடு செல்ல அனுமதி

காட்டுத்தீ காரணமாக வெளியேற்றப்பட்ட பலர் மீண்டும் வீடு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

வடகிழக்கு British Colombiaவில் இருந்து வெளியேற்றப்பட்ட 2,400 பேர் மீண்டும் வீடு செல்ல வியாழக்கிழமை (15) அனுமதிக்கப்பட்டனர்.

Tumbler Ridge நகராட்சிக்கான இந்த வெளியேற்ற உத்தரவு கடந்த வாரம் வியாழக்கிழமை (08) அமுலுக்கு வந்தது .

அதேவேளை Edson Alberta, Yellowhead County வாசிகள் மீண்டும் வீடு திரும்ப வியாழனன்று அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த 9ஆம் திகதி இந்த பகுதியில் இருந்து 8 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது.

ஆனாலும் இந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை நடைமுறையில் உள்ளது.

அங்கு வசிப்பவர்கள் குறுகிய அறிவிப்பில் வெளியேற தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

கோடை காலத்தின் வெப்பமான நாட்கள் இதுவரை உணரப்படவில்லை: சுற்றுச்சூழல் கனடா

கனேடிய விமான நிலையங்களில் தாமதங்களும் குழப்பங்களும் ஏற்படலாம்

Lankathas Pathmanathan

August இறுதிக்கு பின்னரும் கனேடிய இராணுவத்தினர் காபூலில் தங்கியிருப்பார்: பிரதமர் Trudeau!

Gaya Raja

Leave a Comment