தேசியம்
செய்திகள்

தாயகத்தில் உள்ள தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவோம்: கரி ஆனந்தசங்கரி

தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு Scarborough Rouge Park நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி வியாழக்கிழமை (18) நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்த நாளை நினைவு கூறும் இவ்வேளையில், தாயகத்தில் உள்ள தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி அவர்கள் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவோம் என அவர் கூறினார்.

Gary

உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள், அவர்களது குடும்பத்தினருடன் இணைந்து செய்யப்பட தயாராக உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில், மகிந்த ராஜபக்ச, கோத்தபய ராஜபக்சே உட்பட நான்கு இலங்கை அதிகாரிகள் மீது கனடிய அரசாங்கம் பொருளாதாரத் தடைகளை விதித்ததை அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை உட்பட்ட பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் கனடா பொறுப்புக்கூறலை தொடர்ந்து வலியுறுத்தும் என கரி ஆனந்தசங்கரி கூறினார்.

Related posts

Ontarioவில் எரிபொருளின் விலை 8 சதம் குறையும்

Lankathas Pathmanathan

கனேடியர்கள் எகிப்து வழியாக காசாவை விட்டு வெளியேறும் திட்டம் இரத்து!

Lankathas Pathmanathan

வாகன திருட்டு குற்றச்சாட்டில் தமிழர் உட்பட 8 பேர் கைது!

Lankathas Pathmanathan

Leave a Comment