தேசியம்
செய்திகள்

சூடான் தலைநகர் தூதரகத்தை மூடிய கனடா

சூடானின் தலைநகரில் உள்ள தனது தூதரகத்தை கனடா மூடியுள்ளது.

மூன்றாவது நாளாக திங்கட்கிழமை (17) வன்முறைகள் நீடித்து வரும் நிலையில் இந்த முடிவை கனடிய அரசாங்கம் எடுத்துள்ளது.

சூடானுக்கு பயண ஆலோசனையை ஞாயிற்றுக்கிழமை (16) கனேடிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது.

சூடானுக்கு அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கனேடியர்களுக்கு அந்த பயண ஆலோசனை அறிவுறுத்துகிறது.

சூடானில் ஏற்கனவே உள்ள கனடியர்கள் பாதுகாப்பான தங்குமிடங்களில் தங்கியிருக்குமாறும் கனடிய அரசாங்கம் கோரியுள்ளது.

சூடானில் கடந்த வார இறுதியில் நிகழ்ந்த வன்முறையில் குறைந்தது 185 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 1,800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Related posts

கனடாவை சிறந்த நாடாக மாற்றுவதில் Alberta ‘மையமாக’ இருக்க வேண்டும்: Mark Carney

Lankathas Pathmanathan

4,000 உக்ரேனியர்கள் கனடாவில் குடியேறுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

Lankathas Pathmanathan

மாகாணங்கள் Notwithstanding உட்பிரிவை முன்கூட்டியே பயன்படுத்தக்கூடாது: Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment