தேசியம்
செய்திகள்

பேரூந்து தாக்குதலில் ஒருவர் மீது நான்கு பயங்கரவாத குற்றச்சாட்டு

பேரூந்தில் ஒருவரை கத்தியைக் காட்டி மிரட்டி, மற்றொருவரின் கழுத்தை அறுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

British Colombia மாகாணத்தின் Surrey நகரில் கடந்த சனிக்கிழமை (01) காலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த கத்தி தாக்குதல் ISIS பயங்கரவாதம் என RCMP குற்றம் சாட்டியுள்ளது.

இதில் Abdul Aziz Kawam என்ற சந்தேக நபர் மீது நான்கு பயங்கரவாத குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

இந்த நான்கு குற்றங்களும் பயங்கரவாதக் குழுவின் வழிகாட்டுதலின் பேரில் அல்லது அதனுடன் இணைந்து செயல்படும் வகையில் அமைந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

Related posts

சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்க கோரிக்கை!

Gaya Raja

Ontario-Quebec எல்லையில் நிலநடுக்கம்

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் முன்னாள் இடைக்காலத் தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment