தேசியம்
செய்திகள்

தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தின் இறுதி வடிவமைப்பு திறந்து வைப்பு

Brampton நகரில் அமையவுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தின் இறுதி வடிவமைப்பு புதன்கிழமை (22) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Chinguacousy பூங்காவில் நிர்மாணிக்கப்படும் நினைவுச் சின்னத்திற்கான இறுதி வடிவமைப்பை தமிழ் சமூக உறுப்பினர்கள் Brampton நகர மண்டபத்தில் வெளியிட்டனர்.

இந்த நிகழ்வில் Brampton நகர முதல்வர் Patrick Brown, பிராந்திய உறுப்பினர் Martin Medeiros உள்ளிட்ட Brampton நகர சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கைத்தீவின் உள்நாட்டுப் போரின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் Brampton நகரில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கு நகரசபை கடந்த வருடம் ஏகமனதாக அனுமதி அளித்தது.

Brampton தமிழ்ச் சங்கம், Brampton தமிழ் மூத்தோர் சங்கம் இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்திருந்தனர்.

Related posts

Albertaவின் சுகாதார அமைப்பு வீழ்ச்சியின் விளிம்பில்: மருத்துவர்கள் எச்சரிக்கை

Gaya Raja

அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட Conservative தலைவருக்கு அழைப்பு!

Lankathas Pathmanathan

RCMP அதிகாரி Quebec காவல்துறையால் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

Leave a Comment