தேசியம்
செய்திகள்

Huawei நிர்வாக அதிகாரிக்கு எதிரான நாடு கடத்தல் உத்தரவை கைவிட்ட கனடா!

Huawei நிர்வாக அதிகாரி Meng Wanzhouக்கு எதிரான நாடு கடத்தல் உத்தரவை கனடா கைவிட்டுள்ளது.

அமெரிக்க நீதித்துறை அதிகாரிகளுடன் Wanzhou இணக்கப்பாடொன்றை கண்ட நிலையில் இந்த நாடு கடத்தல் உத்தரவு கைவிட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை British Colombia மாகாண நீதிபதி அவரை நாடு கடத்தும் வழக்கை தள்ளுபடி செய்தார்.

Wanzhouவுக்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டுகளை தீர்ப்பதற்காக அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் ஒப்பந்தம் செய்ததை அடுத்து அவரை நாடு கடத்தும் வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

விசாரணையின் போது Mengகின் நடத்தைக்காக நன்றி கூறிய நீதிபதி, அவரை தடுப்பு காவல் நிபந்தனைகளில் இருந்து விடுவித்தார்.

இதன் மூலம் ஒத்திவைக்கப்பட்ட வழக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும், சில விதிமுறைகளின் கீழ் கனடாவை விட்டு வெளியேறவும் Wanzhouக்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

இந்த இணக்கப்பாடு மூன்று ஆண்டுகள் நீடித்த முக்கிய புவிசார் அரசியல் வழக்கை முடிவுக்கு கொண்டு வருகிறது.

இந்த நிலையில் Vancouver சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக Mengவெள்ளிக்கிழமை மாலை சீனா செல்லும் விமானத்தில் பயணித்துள்ளார்.

Related posts

கட்சி தலைவர்கள் விவாதங்களில் பங்கேற்க ஐந்து முன்னணி அரசியல் கட்சிகள் தகுதி!

Lankathas Pathmanathan

ஒரு தசாப்த இடைவெளிக்குப் பின்னர் அமெரிக்க இராணுவப் பயிற்சியில் ஈடுபடும் கனடா?

Lankathas Pathmanathan

கனேடிய பொது தேர்தலில் மேலும் ஒரு தமிழ் வேட்பாளர்!

Gaya Raja

Leave a Comment