இந்திய பிரதமரை கனடிய பிரதமர் கனடாவுக்கு அழைத்துள்ளார்.
கனடிய பிரதமர் Mark Carney, இந்தியப் பிரதமர் Narendra Modi-யை இந்த ஆண்டின் பிற்பகுதியில் கனடாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
G7 உச்சி மாநாட்டின் இடையே இரு தலைவர்களும் சந்தித்த பின்னர் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக Mark Carney அலுவலகம் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தது.
இந்த அழைப்பிற்காக பிரதமருக்கு Narendra Modi நன்றி தெரிவித்தார்.
கனடாவில் இந்திய அரசு பின்பற்றுவதாகக் குற்றம் சாட்டப்பட்ட வெளிநாட்டுத் தலையீடு அல்லது நாடு கடந்த அடக்குமுறை குறித்து, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட சந்திப்பு அறிக்கையில் எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை.
இருப்பினும், வகைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு, பாதுகாப்புத் தகவல்களின் பரிமாற்றத்தை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
Mark Carney இந்த வார ஆரம்பத்தில் France உடன் இதேபோன்ற ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
February மாத இறுதியில், March மாத ஆரம்பத்தில் Mark Carney இந்தியாவுக்கு பயணம் செய்தார்.
அங்கு இரு தலைவர்களும் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுக்க ஒப்புக் கொண்டதோடு, ஒரு புதிய எரிசக்தி ஒப்பந்தத்தையும் ஏற்படுத்திக் கொண்டனர்.
