Markham நகரில் திட்டமிட்ட கடத்தல் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர்.
திட்டமிடப்பட்ட கடத்தல் சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக York பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது
திட்டமிட்ட கடத்தல் நடவடிக்கை ஒன்று குறித்த விசாரணையை May 21 அன்று காவல்துறை ஆரம்பித்தது.
வணிக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் சந்தேக நபர் ஒருவர் கண்காணிப்புக் கருவியை பொருத்தியது குறித்து அறிந்ததை அடுத்து, இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
இதில் சந்தேகத்திற்குரிய வாகனம் அடையாளம் காணப்பட்டதாகவும், அது மறுநாள் அதே வணிக வளாகத்திற்கு திரும்பியதாகவும் புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பிட்ட வாகனத்தை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.
அதில் இரண்டு சந்தேக நபர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டனர்.
பின்னர் திட்டமிடப்பட்ட கடத்தல் வழக்கில் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபர் புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில் Toronto நகரை சேர்ந்த 30 வயதான Donald Smith, 25 வயதான Tenzin Tsegyal, 25 வயதான Yeshi Tendar ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மொத்தம் 10 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
குறிப்பிட்ட திட்டமிடப்பட்ட கடத்தல் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
