சமூக மையம் ஒன்றில் சிறுவர்கள் அடைத்து வைக்கப்பட்டதை தொடர்ந்து, Vaughan நகர முன்னாள் ஊழியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Vaughan நகரத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர், சமூக மையம் ஒன்றில் இரண்டு சிறார்களை அறைக்குள் அடைத்து வைத்து, அவர்களில் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
Vaughan நகரைச் சேர்ந்த 65 வயதான சார்லஸ் மாணிக்கம் என்பவரை, பாலியல் மிரட்டல், பாலியல் வன்கொடுமை, பாலியல் தலையீடு ஆகிய குற்றச்சாட்டுகளில் York பிராந்திய காவல்துறை கைது செய்து அவர் மீது குற்றம் சாட்டியது.
கைது செய்யப்பட்ட நேரத்தில் அவர் Vaughan நகரத்தில் பணியாற்றவில்லை என காவல்துறை தெரிவித்தது.
சம்பவ தினமான April 30, 2026 அன்று Dufferin Street – Clark Avenue சந்திப்பில் உள்ள Dufferin Clark சமூக மையத்தில் பாதிக்கப்பட்டவர்களை அங்குள்ள ஊழியர் ஒருவர் அணுகினார்.
பாதிக்கப்பட்டவர்கள் ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்டனர்.
சிறிது நேரத்திற்குப் பின்னர் அவர்கள் அறையை விட்டு வெளியேற முயன்றபோது அவர்களில் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் இருவருக்கும் உடல்ரீதியாக காயம் ஏற்படவில்லை எனவும் காவல்துறை தெரிவித்தது.
மேலும் பலர் இவரினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் நம்புவதால், இது குறித்த தகவல் தெரிந்தவர்கள் புலனாய்வாளர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமது முன்னாள் ஊழியருக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகளை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம் எனவும், காவல்துறையுடன் முழுமையாக ஒத்துழைத்து வருகிறோம் எனவும் Vaughan நகரம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன் “உடனடி நடவடிக்கை” எடுக்கப்பட்டதாகவும், அந்த நபரை பணியில் இருந்து நீக்கி, ஒரு உள்ளக விசாரணையை ஆரம்பித்ததாகவும் Vaughan நகர பேச்சாளர் கூறினார்.
இந்த விசாரணையின் விளைவாக நகரத்துடனான அவரது வேலை முடிவுக்கு வந்தது எனவும் கூறப்படுகிறது.
இந்த விடயத்தை Vaughan நகரம், York பிராந்திய காவல்துறையின் கவனத்திற்கும் கொண்டு சென்றதாகவும் அதிகாரிகள் கூறினர்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றசாட்டுகள் ஏதும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
